Sunday, June 27, 2010

ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு: திருமாவளவன்

ஈழத் தமிழர்களுக்கு தனிநாடு அமைத்துத் தர வேண்டும் என தமிழக முதலமை‌ச்சர் கருணாநிதிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கோ‌ரி‌க்கை வை‌த்து‌ள்ளா‌ர்.

கோவையில் நடைபெற்று வரும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவ‌ர் பேசுகை‌யி‌ல், "தமிழா, உன் உறுதியை இழந்துவிடாதே என்று கூறுவதற்காகத்தான், இந்த மாநாட்டை முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி இங்கே நடத்திக் கொண்டிருக்கிறார்.

அறிவுசார்ந்த துறைகளில் தமிழ் ஏற்றம் பெற வேண்டும் என்பது, முதலமை‌ச்சர் வெளிப்படையாக அறிவித்திருக்கும் மாநாட்டின் நோக்கம். சோர்ந்துவிடாமல், தமிழர்கள் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும், மொழி உணர்வை ஊக்கப்படுத்த வேண்டும். இன உணர்வு இருந்தால்தான் ஒற்றுமையும் பாதுகாப்பும் உறுதிப்படும்.

தமிழை ஆட்சி மொழியாக்குங்கள். இதற்காக இந்த அரசுக்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம். எந்த மதிப்பும் இல்லை. செம்மொழியான தமிழ் ஆட்சியில் இல்லை.

தமிழை ஆட்சிமொழி ஆக்காவிட்டால், இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் ஆவணக் காப்பகத்தில்தான் கிடக்கும். அடுத்த வேண்டுகோள். ஈழத் தமிழர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துங்கள்'' என்று திருமாவளவ‌ன் கூ‌றினா‌ர்.

No comments:

Post a Comment

Blog Archive