Sunday, June 27, 2010

பி.எல்.ரேங்க் பட்டியல் வெளியீடு: ஜூலை 7 ல் கவுன்சிலிங் தொடக்கம்

பி.எல். சட்டப்படிப்புக்கான ரேங்க் பட்டியலை வெளியிட்டுள்ள அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் வருகிற ஜூலை மாதம் 7 ஆம் தேதியன்று தொடங்குவதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக பதிவாளர் டி.கோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

அரசு சட்டக் கல்லூரிகளில் 5 ஆண்டு பி.எல். சட்டப் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ரேங்க் பட்டியலை பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.கவுன்சிலிங் ஜுலை 7 ஆம் தேதி தொடங்குகிறது.சென்னையில் உள்ள சட்ட பல்கலைக்கழகத்தில் கவுன்சிலிங் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Blog Archive